புயல் சின்னம்: தமிழகத்தில் பரவலாக மழை
சென்னை:
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைபெய்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசை நகரக் கூடிய வாய்ப்பு இருப்பதால், தமிழகத்தின் வடக்குமற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு நல்ல மழை பெய்யும். அதேபோல் தென்தமிழகத்தின் சில இடங்ளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், அவ்வப்போது மழைபெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்றிரவில் இருந்து இன்று காலை 10 மணி வரை மழை பெய்தது. இதனால், சென்னைக்கு நீர்வினியோகம் செய்யும் பூண்டி, சோழாவரம் ஏரிகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
அதேபோல வேலூர், உடுமலைப்பேட்டை, ஆண்டிப்பட்டி பகுதிகளில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications