For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக அரசியல் தீண்டாமை: பா.ஜ.க. புகார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பா.ஜ.கவிடம் திமுக தலைவர் கருணாநிதி அரசியல் தீண்டாமையைக் கடைபிடிப்பதாக அக் கட்சியின் மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன்கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

திருப்பூரில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி ஒருஅறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் மதவாதக் கட்சியினர் என்று மறைமுகமாக பா.ஜ.கவை குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி. பாஜகவின் பெயரைக் கூட நேரடியாகசொல்லாமல் ஏன் இந்த அரசியல் தீண்டாமையை கருணாநிதி கடைபிடிக்க வேண்டும்?

பிள்ளையார் சிலைகளை உடைத்து சேதப்படுத்தியவர்கள் யார், இந்துக்கள் புனிதமாகக் கருதும் நிகழ்ச்சிகளில் வன்முறையைத்தூண்டிவிட்டு மத மோதல்களுக்கு வித்திட்டது யார் என்பது கருணாநிதிக்குத் தெரியாமல் இருக்கலாம்.

ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டிக்கும் கருணாநிதி, பிள்ளையார் சிலையை உடைத்தவன்முறையாளர்களை கண்டிக்காமல் விட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ராதாகிருஷ்ணன்.

செருப்பு மாலை:

இந் நிலையில் இன்று கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பியான சுப்பராயனின் கட்-அவுட்டை வைத்து, அதற்கு சிலர்செருப்பு மாலை அணிவித்தனர். இதனால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மருதமலை மெயின்ரோட்டுக்கு அருகே பி.என்.புதூரில் கல்யாண மண்டப வாசலில் கட்-அவுட்டை வைத்து அதற்கு செருப்பு மாலைஅணிவிக்கப்பட்டிருந்தது. இதைக் கண்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆத்திரமடைந்தனர்.

ஏராளமான அளவில் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் திரண்டனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து கட்-அவுட்டையும் செருப்புமாலையையும் அப்புறப்படுத்தினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X