பலியானோர் எண்ணிக்கை 15 ஆனது: குடும்பங்களுக்கு ஜெ. உதவி
சென்னை:
உத்தராஞ்சல் மாநிலத்தில் மலையிலிருந்து பஸ் உருண்டதில் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14 பேர்தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கலும்,நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மகாலட்சுமி டிராவல்ஸ் நிறுவனம் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 120 பேர் பத்ரிநாத் புனித யாத்திரைசென்றனர். டெல்லி வழியாக அவர்கள் பஸ்சில் பத்ரிநாத் சென்றபோது, உத்தராஞ்சல் மாநலம் சமோலி மாவட்டத்தில் மலைப் பாதையில்பயணித்தபோது, பஸ் 200 அடிப் பள்ளத்தில் உருண்டு விழுந்ததில், 13 பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள்.
மேலும் இருவர் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி பலியாயினர்.
பலியானோர் விவரம்:
ராமமூர்த்தி (75), சீதாராம் (71), ராஜன் (54), ராஜா (49), டி.எஸ்.ராவ் (58), சியாமளா (65), சுந்தர மகாதேவன் (64), சுந்த ராமன் (63),பாலுசந்த் (52), காமாட்சி (50), லட்சுமி (57), சுந்தர்ராஜன், விசாலாட்சி, சுந்தரம் அய்யர் (62), சரஞ்சித் சிங் (பஸ் டிரைவர்).
இந்த 15 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 50,000 நிதியுதவியும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 15,000, லேசானகாயமடைந்தவர்களுக்கு ரூ. 6000 வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, விபத்தில் பலியானோரின் உடல்கள் டெல்லியிலிருந்து இன்று விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்படுகின்றன.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications