கொலை வழக்கில் 6 பேருக்கு 29 ஆண்டு சிறை
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி:
ஓசூரில் சாக்லேட் தொழிற்சாலை அதிபரை வெட்டிக் கொன்ற வழக்கில் 6 பேருக்கு தலா 29 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சாக்லேட் தொழிற்சாலை வைத்திருந்தவர் பால சுந்தரராஜ். இவர், கொலை நாகராஜ் என்பவருக்கு எதிரானஒரு வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சி கூறினார்.
இதையடுத்து நான்காண்டுகளுக்கு முன் நாகராஜ் கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கு கிருஷ்ணகிரி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இதில் தீர்ப்பளித்த நீதிபதி நந்தன், நாகராஜ் உள்ளிட்ட 6 பேருக்கு தலா 29 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 40,000 அபராதமும்விதித்தார்.












Click it and Unblock the Notifications