For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொடைக்கானல்: 100 வயது பாலம் இடிந்து விழுந்தது

By Staff
Google Oneindia Tamil News

கொடைக்கானல்:

கொடைக்கானலில் பெய்து வரும் கன மழைக்கு 100 ஆண்டு கால பழமை வாய்ந்த பாலம் உடைந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தென் மேற்குப் பருவ மழை வலுத்துள்ளது. குறிப்பாககொடைக்கானல் மலைப் பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானல் ஏரி நிரம்பி தண்ணீர்சாலைகளில் ஓடத் தொடங்கியுள்ளது.

செண்பகனூர், நாயுடுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழையினால், சில இடங்களில் மண் சரிவுஏற்பட்டுள்ளது. ஏரிப் பகுதி சாலையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டபாலம் இடிந்து விழுந்தது.

இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு பாலத்தை சரி செய்யும் பணியில்ஈடுபடுத்தப்பட்டனர். இந்தப் பாலம் கடந்த 1882ம் ஆண்டு வெள்ளைக்கார மதுரை ஆட்சித் தலைவரான சர்ஹென்றி லெவின்ஞ் என்பவரால் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X