நடுவானில் பிறந்தநாள் கொண்டாடிய மன்மோகன்
நியூயார்க்:
பிரதமர் மன்மோகன் சிங் அவரது 73-வது பிறந்த நாளை நடுவானில் விமானத்தில் கொண்டாடினார்.
இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் 9 நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஜெனீவாவுக்குச் செல்லும்வழியில் இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் எனப் பெயரிடப்பட் ஏர் இந்தியாவின் தனி விமானத்தில், உயர் அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள்மற்றும் மனைவி குர்ஷரன் கெளர் அருகில் இருக்க மன்மோகன் சிங் பிறந்த நாள் கேக் வெட்டினார்.
இதற்காக இரண்டு கேக்குள் தயார் செய்யப்பட்டிருந்தன. ஒரு கேக்கில் பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்என்று எழுதப்பட்டிருந்து.
மன்மோகன் சிங் இப்போதைய பாகிஸ்தானில் உள்ள கா கிராமத்தில் 1932-ல் பிறந்தார். தனது பிறந்தநாள் எதுஎன்பது தனக்குத் தெரியாது என்றும், பள்ளியில் சேர்க்கும்போது தனது தாயார் கொடுத்த தேதியே தனது பிறந்தநாளாகிவிட்டது என்றும் மன்மோகன் முன்பே குறிப்பிட்டிருக்கிறார்.
கலாம், கருணாநிதி வாழ்த்து:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் டெல்லியில் உள்ள மன்மோகன் சிங்கின் இல்லத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துச்செய்தியும், பூங்கொத்தும் அனுப்பியிருந்தார். இதற்கு மன்மோகன் சிங், நியூயார்க்கில் இருந்து புறப்படும் முன்பாககலாமுக்கு தொலைபேசி மூலம் நன்றி தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், தங்களுடைய பிறந்த நாளுக்கு என்னுடையவாழ்த்தை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் நாட்டு மக்களுக்கு உங்கள் சேவைதொடர்ந்து இருக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications