நாடு திரும்பினார் பிரதமர் மன்மோகன் சிங்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
9 நாள் அமெரிக்க, இங்கிலாந்து பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மன்மோகன் சிங் நேற்றிரவு நாடுதிரும்பினார்.
டெல்லி விமான நிலையத்தில் அவரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மூத்த அமைச்சர்கள், முப்படைத்தளபதிகள் வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிங்,
இந்தப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புடன் நடத்திய பேச்சுவார்த்தைமிக முக்கியமானது. ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்கச் செய்ய பல நாடுகளின்ஆதரவும் இந்தப் பயணத்தின்போது திரட்டப்பட்டது என்றார்.
நியூயார்க்கில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய், தென் ஆப்பிரிக்க அதிபர்தபோ மெகி ஆகியோரையும் லண்டனில் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேரையும் சிங் சந்தித்துப் பேசினார்.












Click it and Unblock the Notifications