ஈவ் டீசிங்: சஸ்பெண்ட் ஆன போலீஸ்காரர் கைது
சென்னை:
சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ்காரர் ஒருவர் பெண்ணை ஈவ் டீசிங் செய்தார். இதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டார்.
பல்லாவரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் சம்பத் என்ற கஜா (38). வீட்டில் மனைவியுடன் தகராறு,அடிதடி ஆகிய காரணங்களால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வேலை பறிபோன நிலையிலும் திருந்தாத சம்பத்,பெண்களைக் கேலி செய்து, குடித்துவிட்டுக் கொட்டமடிப்பது என வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.
இந் நிலையில், தாம்பரம் அருகே ஸ்கூட்டியில் சென்ற உமா (24), உமா மகேஸ்வரி (26) ஆகிய சகோதரிகளை,தனது நண்பர் முருகன் என்பவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் விரட்டியுள்ளார் சம்பத்.
இதையடுத்து உமாவும் உமா மகேஸ்வரியும் தாம்பரம் காவல் நிலையத்தில் சென்று புகார் கொடுத்தனர். அவர்கள்கொடுத்த பைக்கின் நம்பரை வைத்து சம்பத்தையும் முருகனையும் போலீசார் கைது செய்தனர். இருவர் மீதும் ஈவ்டீசிங் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications