தமிழகத்தில் கன மழை தொடர்கிறது
சென்னை:
தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகியிருப்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்தஇரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
நேற்று மயிலாடுதுறையிலும் தேனி மாவட்டத்திலும் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக பலத்த மழைபெய்தது.
இந்த மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது. சேலம், கிருஷ்ணகிரி, கடலூரில் இன்று காலை முதல் மிக பலத்த மழை பெய்து வருகிறது.சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இன்று மாநிலத்திலேயே அதிக பட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியில் கன மழை பதிவானது.
நேற்று மயிலாடுதுறை, தேனி மாவட்டத்திலும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 80 மி.மீ. மிக பலத்தமழை பெய்தது. அதே போல மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களிலும் கன மழை பெய்துள்ளது.
மழையால் வைகை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி அதிகரித்தது.












Click it and Unblock the Notifications