For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வெடித்த வெடிகுண்டு!

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு கன்-பவுடர் எனப்படும் வெடிபொருள் கடத்தல் தொடர்பானவழக்கு நடந்து வந்தது. அந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட கன் பவுடர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

நீதிமன்ற அறையில் இருந்த பல்வேறு பொருட்களுடன் இந்த கன் பவுடர் இருந்த பையும் வைக்கப்பட்டிருந்தது.

அந்த அறையில் பழைய பொருட்கள் அதிகம் சேர்ந்துவிட்டதால் அவற்றை எரித்துவிட நீதிமன்ற ஊழியர்கள்முடிவு செய்தனர்.

அறையில் இருந்த பழைய பொருட்கள், குப்பைகளை எடுத்து வந்த அவர்கள் அதில் கன் பவுடர் இருந்ததைக்கவனிக்கவில்லை. நீதிமன்ற வளாகத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் அவற்றைப் போட்டு தீ வைத்துள்ளனர்.

அப்போது கன் பவுடர் பயங்கர சப்தத்துடன் வெடித்தது.

இதில் நீதிமன்ற ஊழியர் ராமு என்பவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவர் தஞ்சாவூர் அரசுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொது மக்களும், வழக்கறிஞர்கள்அலறியடித்தபடி ஓடினர். நீதிமன்றத்தின் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடந்துவிட்டதாக தகவல் பரவியதையடுத்துமாவட்ட ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன், காவல்துறைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் ஆகியோரும் அங்குவிரைந்து வந்தனர்.

போலீசார் விசாரணை நடத்தியபோது தான் கன்-பவுடர் இருந்ததும் அது தீ வைக்கப்பட்டதால் வெடித்ததும்தெரியவந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X