போதை மருந்து: பிரதிமா, சானுவுக்கு ஆயுள் தடை
டெல்லி:
ஊக்க மருந்து உட்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட பளு தூக்கும் வீராங்கனைகள் பிரதிமா குமாரி, சனமாச்சாசானு, சுனைனா மற்றும் பயிற்சியாளர் பால்சிங் சாந்து ஆகியோருக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆயுட்காலதடை விதித்துள்ளது.
ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதற்கு முன்பு நடத்தப்பட்ட சோதனையில் பிரதிமாவும், ஒலிம்பிக்போட்டியின்போது சானுவும் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆசிய சாம்பியன் போட்டியின்போது சுனைனா ஊக்க மருந்துபயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இந்த மூவரும், பளுதூக்கும் போட்டி பயிற்சியாளர் சாந்துஆகியோருக்கு ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பெலராஸ் நாட்டைச் சேர்ந்த பயிற்சியாளர் லியோனிட் டேரனென்கோவையும் இந்திய ஒலிம்பிக்சங்கம் நீக்கியுள்ளது.
இத் தகவலை இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடி தெரிவித்தார்.