பெங்களூரில் தங்க முகம்மது அலிக்கு நிபந்தனை
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் சிபிசிஐடி டிஐஜிமுகம்மது அலி உள்ளிட்ட 3 பேரும் பெங்களூரில் தங்கியிருந்து தினமும் சிபிஐ அலுவலகத்தில் கையெழுத்திடவேண்டும் என்று சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர்கள் மீதான வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததாலும், சிறைவாசம் மேற்கொண்டு 90நாட்கள் ஆகி விட்டதாலும், 3 பேரையும் சென்னை எழும்பூர் பெருநகர முதன்மை குற்றவியல் நீதிமன்றம்இவர்களை ஜாமீனில் விடுவித்தது.
இவர்களிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், 3 பேரையும் பெங்களூரில் தங்கியிருந்து தினமும்சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதிக்குமாறு சிபிஐ தரப்பு வழக்கறிஞர் ஜேக்கப்டேணியல் கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிபதி அருள்ராஜ், 3 பேரும் பெங்களூரில் தங்கியிருக்க வேண்டும். அங்குள்ள சிபிஐஊழல் தடுப்பு அலுவலகத்தில் தினசரி ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
உத்தரவைத் தொடர்ந்து நேற்றிரவே முகம்மது அலி உள்ளிட்ட 3 பேரும் சென்னை மத்திய சிறையிலிருந்துவிடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.
இவர்கள் மீதான வழக்கில் தங்களுக்கு தமிழக அரசு, போலீஸ் மற்றும் எல்.ஐ.சி. நிறுவனத்திடம் இருந்து போதியஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று சிபிஐ குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications