பெங்களூரில் தங்க முகம்மது அலிக்கு நிபந்தனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் சிபிசிஐடி டிஐஜிமுகம்மது அலி உள்ளிட்ட 3 பேரும் பெங்களூரில் தங்கியிருந்து தினமும் சிபிஐ அலுவலகத்தில் கையெழுத்திடவேண்டும் என்று சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவர்கள் மீதான வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததாலும், சிறைவாசம் மேற்கொண்டு 90நாட்கள் ஆகி விட்டதாலும், 3 பேரையும் சென்னை எழும்பூர் பெருநகர முதன்மை குற்றவியல் நீதிமன்றம்இவர்களை ஜாமீனில் விடுவித்தது.

இவர்களிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், 3 பேரையும் பெங்களூரில் தங்கியிருந்து தினமும்சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதிக்குமாறு சிபிஐ தரப்பு வழக்கறிஞர் ஜேக்கப்டேணியல் கோரிக்கை விடுத்தார்.

இந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிபதி அருள்ராஜ், 3 பேரும் பெங்களூரில் தங்கியிருக்க வேண்டும். அங்குள்ள சிபிஐஊழல் தடுப்பு அலுவலகத்தில் தினசரி ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

உத்தரவைத் தொடர்ந்து நேற்றிரவே முகம்மது அலி உள்ளிட்ட 3 பேரும் சென்னை மத்திய சிறையிலிருந்துவிடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.

இவர்கள் மீதான வழக்கில் தங்களுக்கு தமிழக அரசு, போலீஸ் மற்றும் எல்.ஐ.சி. நிறுவனத்திடம் இருந்து போதியஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று சிபிஐ குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+