கம்யூ. எதிர்ப்பு: திட்ட கமிஷன் குழுக்கள் கலைப்பு
டெல்லி:
இடதுசாரிக் கட்சிகளின் எதிர்ப்பால், வெளிநாட்டு நிதி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றிருந்த 19ஆலோசனைக் குழுக்களை மத்திய திட்டக் கமிஷன் கலைத்துவிட்டது.
10வது ஐந்தாண்டுத் திட்ட இடைக்கால மதிப்பீட்டுக்காக ஆலோசனை குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தகுழுக்களில் வெளி நாட்டு நிதி ஆலோசனை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றதற்கு கம்யூனிஸ்ட்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
அமெரிக்கா, இங்கிலாந்தில் பிரதமருடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த திட்டக்கமிஷன் துணைத் தலைவர்மாண்டேக்சிங் அலுவாலியா, ஆலோசனைக் குழுவில் வெளிநாட்டு நிறுவனங்கள் இடம் பெற்றிருப்பதில்தவறில்லை என்றார்.
இதைக் கண்டித்து திட்டக் குழுவிலிருந்து விலகுவதாக கம்யூனிஸ்ட் சார்புடைய பொருளாதார நிபுணர்கள்அறிவித்தனர்.
உலக வங்கி, மெக்கின்சே, ஆசிய வளர்ச்சி வங்கி, பர்ஸ்ட் பாஸ்டன் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 9 நிபுணர்களைஆலோசனைக் குழுவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியாவைச் சந்தித்தும்இடதுசாரிகள் வற்புறுத்தினர்.
இதையடுத்து இக் குழுக்களில் இருந்து விலக வெளிநாட்டு ஆலோசகர்கள் முன் வந்தனர். இதையடுத்து இக்குழுக்களை கலைக்க திட்டக் கமிஷன் முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications