திண்டுக்கல் அருகே சாலை விபத்தில் 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே நடந்த சாலை விபத்தில் இரு குடும்பங்களைச் சேர்ந்த 6 பேர் பலியானார்கள்.
சென்னை செளகார்பேட்டையைச் சேர்ந்த ரோஷன், சஞ்சய் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் டயோட்டாகுவாலிஸ் காரில் கொடைக்கானல் சென்றனர். அவர்களது கார் இன்று காலை 6.30 மணியளவில் திண்டுக்கல்புறவழிச்சாலை அருகே போய்க் கொண்டிருந்தது.
அப்போது எதிரே கொல்லத்தில் இருந்து சென்னைக்கு மரம் ஏற்றிக் கொண்டு படு வேகத்தில் வந்த லோரி, கார் மீதுபயங்கரமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த சஞ்சய் (30), அவரது மனைவி லேகா (26), மகள் சோனு (2),ரோஷன் (32), அவரது மனைவி ஷர்மிளா (26), கார் டிரைவர் கோபி (28) ஆகியோர் சம்பவ இடத்திலேயேபலியானார்கள்.
மேலும் 3 குழந்தைகள் லேசான காயங்களோடு உயிர் தப்பினர். இக் குழந்தைகள் திண்டுக்கல் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications