நாகாலாந்தில் குண்டு வெடிப்பு: 22 பேர் பலி
கொகிமா & கெளஹாத்தி:
நாகாலாந்து தலைநகர் கொகிமாவில் நடந்த இரு குண்டு வெடிப்புகளில் 18 பேர் பலியாயினர். நூற்றுக்கும் அதிகமானவர்கள்காயமடைந்தனர்.
அதே போல அஸ்ஸாமில் சிராங் மாவட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் பலியானார். 18 பேர் காயமடைந்துள்ளனர்.
கொகிமாவில் திமாபூர் ரயில் நிலையத்திலும் ஹாங்காங் மார்க்கெட் என்ற பகுதியிலும் இன்று காலை அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டுகள்வெடித்தன. ரயில் நிலையத்தில் வெடித்த குண்டில் 12 ரயில் பயணிகள் அந்த இடத்திலேயே பலியாயினர். 60 பேர் காயமடைந்தனர்.இறந்தவர்களில் பள்ளிக் குழந்தைகள் பலரும் அடங்குவர்.
அடுத்து ஹாங்காங் மார்க்கெட்டில் வெடித்த குண்டில் 6 பேர் சம்பவ இடத்தில் பலியாயினர். 40 பேர் காயமடைந்தனர். இச் சம்பவங்களில்பலத்த காயமடைந்த 4 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு இறந்தனர்.
அதே போல அஸ்ஸாமில் இந்திய-பூடான் எல்லைக்கு அருகே கடைப் பகுதியில் இன்று காலை குண்டு வெடித்து ஒருவர் பலியானார். 13பேர் படுகாயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications