For Daily Alerts
Just In
சென்னை அருகே புயல் சின்னம்: கன மழை
சென்னை:
சென்னை அருகே வங்கக் கடலில் புயல் சின்னம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலைஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் 750 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ள இந்தக் குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக சென்னை, வட மாவட்டங்கள்மற்றும் புதுவையில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட கடலோர மாவட்டங்களில் கனத்த மழை பெய்கிறது.
இந்த காற்றழுத்த மண்டலம் வட மேற்கு திசையில் நகரத் தொடங்கியுள்ளதால் வட தமிழகத்திலும் தெற்கு ஆந்திரத்திலும் அடுத்த இருதினங்களுக்கு மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
Story first published: Saturday, October 2, 2004, 5:30 [IST]