மாதுரி விபச்சார வழக்கு: மீண்டும் விசாரணை
சென்னை:
நடிகை மாதுரி மீதான விபச்சார வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விபச்சாரம் செய்ததாக கூறி நடிகை மாதுரி கைது செய்யப்பட்டார். அவர் மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மாதுரி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் போட்ட போலீசார், ஒரு பிரிவின் விசாரணையை நடத்தவில்லை.
விபச்சாரம் செய்வது, விபச்சாரத்தில் மற்றவர்களை ஈடுபடுத்தின் அதன் மூலம் வருவாய் ஈட்டுவது ஆகிய இரு பிரிவுகளின் கீழானபுகார்கள் விசாரிக்கப்பட்டு விட்டன.
ஆனால் தானே விபச்சாரத்தில் ஈடுபடுவது என்ற பிரிவின் கீழான வழக்கை போலீசார் முழுமையாக விசாரிக்கவில்லை என்று கூறிய நீதிபதிதீனதயாளன், அந்த விசாரணையை மீண்டும் நடத்த உத்தரவிட்டார்.
மேலும் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நவம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications