For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பூர் குமரன் தபால் தலை வெளியீடு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சுதந்திரப் போராட்டத் தியாகி திருப்பூர் குமரன் நினைவு தபால் தலை, ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இன்றுவெளியிடப்பட்டது.

திருப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள திருப்பூர் குமரன் நினைவுப் பூங்காவில், குமரன் நூற்றாண்டு விழாக்குழுசார்பாக அதன் தலைவர் வேலப்பன் குமரன் தபால் தலையை வெளியிட, ஓய்வு பெற்ற உதவி தபால்துறை அதிகாரிகதிர்வேலு அதை பெற்றுக்கொண்டார். இந்த தபால் தலை ஒன்றின் விலை 5 ரூபாய்.

அதே போல் தபால் உறையினை குமரன் நூற்றாண்டு விழாக்குழுவின் பொருளாளர் சேர்மன் கந்தசாமி வெளியிடமுன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி அதைப் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,

இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது, ஆங்கிலேயே சிப்பாய்கள் சூழந்துக் கொண்டு தடியால் தாக்கிய போதும்கரங்களில் பிடித்திருந்த தேசிய கொடியை காத்து, கொடி காத்த குமரன் என்று சரித்திரத்தில் நீங்காத இடம்பெற்றவர் திருப்பூர் குமரன்.

அவரது தியாகத்தை போற்றும் வகையில் குமரனின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட வேண்டும்என்று முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை மத்திய அரசுஏற்று கொண்டது.

தமிழக அரசின் சார்பில் அவரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார். விழா நடக்கும் நாள் மற்றும் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X