புத்த மதத்திற்கு மாறும் 1 லட்சம் தலித்துகள்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

பெரம்பலூரில் அக்டோபர் 14ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் 1 லட்சம் தலித் மக்கள் புத்த மதத்திற்குமாறவுள்ளதாக டாக்டர் அம்பேத்கர் இளைஞர் முன்னணி அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் அன்புராசு திருச்சியில் செய்தியாளர்களிடம்பேசுகையில்,

இந்து மதத்தின் ஜாதிக் கொடுமைகளை கண்டித்து 1956ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி, 10 லட்சம் தலித்மக்களுடன் டாக்டர் அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவினார்.

இதைப் பின்பற்றி ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான தலித் மக்கள் அக்டோபர் 14ம் தேதி புத்த மதத்திற்குமாறி வருகின்றனர். கடந்த ஆண்டு கர்நாடகத்தில் மட்டும் 1 லட்சம் தலித்துகள் புத்த மதத்திற்கு மாறினர்.

இந்த ஆண்டு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தலித்துகள் பெரம்பலூரில் நடக்கும் நிகழ்ச்சியில் புத்த மதத்தைத்தழுவவுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 10,000 பேரும், நெல்லையிலிருந்து 15,000 பேரும்,கன்னியாகுமரியிலிருந்து 9,000 பேரும், வேலூரிலிருது 25,000 பேரும் புத்த மதத்தை தழுவவுள்ளனர்.

இதை மத மாற்றம் என்று சொல்ல முடியாது. தாய் வீடு திரும்புவது போன்ற நிகழ்ச்சியே இது. அக்டோபர் 22ம் தேதிநாக்பூர் நகரில் நடக்கும் நிகழ்ச்சியில் 10 லட்சம் தலித்துகள் புத்த மதத்திற்கு மாறவுள்ளனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+