மத நல்லிணக்கத்திற்காக 10 மணி நேரம் சிலம்பாட்டம்!
கடலூர்:
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பட்டதாரி வாலிபர் தொடர்ந்து 10 மணி நேரம் சிலம்பாட்டம் ஆடிசாதனை படைத்தார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தாண்டவராயன் கோட்டை என்ற ஊரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் ஒரு எம்.ஏ.பட்டதாரி.
சிலம்பக் கலையில் தேர்ச்சி பெற்றவரான கார்த்திகேயன், சிலம்பக் கலையின் மகத்துவத்தையும், பாரம்பரியப் பெருமையையும் உலகுக்குத்தெரியப்படுத்தும் வகையிலும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலும் தொடர்ந்து 10 மணி நேரம் சிலம்பாட்டம் ஆடி உலகசாதனை படைக்கத் திட்டமிட்டார்.
இதைத் தொடர்ந்து சிதம்பரத்தில் உள்ள வாண்டையார் திருமண மண்டபத்தில் காலை 8 மணிக்கு தனது சாதனை சிலம்பாட்டத்தைத்தொடங்கினார். இரு கைகளிலும் சிலம்பக் கம்புகளுடன் சிலம்பத்தைத் தொடங்கிய அவர் மாலை 6 மணி வரை தொடர்ந்து 10 மணி நேரம்சிலம்பாடினார்.
ஏராளமான பொதுமக்கள் இந்த சாதனை ஆட்டத்தைப் பார்த்து கார்த்திகேயனை ஊக்கப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications