ஸ்டிரைக்: ஊழியர்களுடன் அரசு விரைவில் பேச்சு
சென்னை:
தீபாவளி போனஸ் விவகாரம் தொடர்பாக போக்குவரத்து, உணவு, மின்வாரியம் மற்றும் ஆவின் நிறுவனங்களின்ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ள நிலையில், அவர்களுடன் பேச்சு நடத்ததமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
கடந்த முறை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை சகட்டுமேனிக்கு டிஸ்மிஸ் செய்துகலவரப்படுத்தியது தமிழக அரசு. இதையடுத்து வந்த தேர்தல் தோல்விகளால் முதல்வர் ஜெயலலிதாவின் நிலையில்பெரும் மாற்றம் ஏற்பட்டது.
அரசு ஊழியர்களுடன் பேச்சே கிடையாது என்று தவிர்த்து வந்த அரசு இப்போது வேலை நிறுத்தம் செய்யப்போகும் தொழிலாளர்களுடன் பேச்சு நடத்திட முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் அரசு மற்றும் அரசு சார்புத்துறை ஊழியர்களுக்கு குறைந்தபட்ச விகிதமான8.33 சதவீத போனஸ் தான் வழங்கப்பட்டு வருகிறது.
இதை 20 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் கோரி வருகின்றன. இம்முறை 20 சதவீதபோனஸ் தராவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் இவை எச்சரித்துள்ளன.
மேற்கண்ட துறைகள் தவிர தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கூட்டுறவு வங்கிகள், சர்க்கரை ஆலைகள்ஆகியவற்றின் ஊழியர்களும் விரைவில் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிடக் கூடும் என்று தெரிகிறது.
இந் நிலையில் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை ஏற்கனவே தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் பேச்சுக்களைத் தொடங்கியுள்ளனர்.
இதில் பிரச்சனை தீராவிட்டால் அடுத்த கட்டமாக அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சு நடக்கலாம் என்று கூறப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா ஹைதராபாத்திலிருந்து சென்னை திரும்பியதும் இந்த விஷயத்தில் முக்கிய முடிவுஎடுக்கப்படும் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எப்படி இருப்பினும் ஊழியர் சங்கங்கள் கோரும் 20 சதவீத போனஸ் தொகை நிச்சயம் வழங்கப்பட மாட்டாதுஎன்று கூறப்படுகிறது. கூடுதல் போனஸ் கோரும் அனைத்துத் துறைகளும் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருவதாகஅரசு கூறுகிறது.
இந் நிலையில் 20 சதவீத போனஸ் கிடைப்பது சந்தேகம்தான்.
-
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications