ஸ்டிரைக்: ஊழியர்களுடன் அரசு விரைவில் பேச்சு
சென்னை:
தீபாவளி போனஸ் விவகாரம் தொடர்பாக போக்குவரத்து, உணவு, மின்வாரியம் மற்றும் ஆவின் நிறுவனங்களின்ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ள நிலையில், அவர்களுடன் பேச்சு நடத்ததமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
கடந்த முறை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை சகட்டுமேனிக்கு டிஸ்மிஸ் செய்துகலவரப்படுத்தியது தமிழக அரசு. இதையடுத்து வந்த தேர்தல் தோல்விகளால் முதல்வர் ஜெயலலிதாவின் நிலையில்பெரும் மாற்றம் ஏற்பட்டது.
அரசு ஊழியர்களுடன் பேச்சே கிடையாது என்று தவிர்த்து வந்த அரசு இப்போது வேலை நிறுத்தம் செய்யப்போகும் தொழிலாளர்களுடன் பேச்சு நடத்திட முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் அரசு மற்றும் அரசு சார்புத்துறை ஊழியர்களுக்கு குறைந்தபட்ச விகிதமான8.33 சதவீத போனஸ் தான் வழங்கப்பட்டு வருகிறது.
இதை 20 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் கோரி வருகின்றன. இம்முறை 20 சதவீதபோனஸ் தராவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் இவை எச்சரித்துள்ளன.
மேற்கண்ட துறைகள் தவிர தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கூட்டுறவு வங்கிகள், சர்க்கரை ஆலைகள்ஆகியவற்றின் ஊழியர்களும் விரைவில் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிடக் கூடும் என்று தெரிகிறது.
இந் நிலையில் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை ஏற்கனவே தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் பேச்சுக்களைத் தொடங்கியுள்ளனர்.
இதில் பிரச்சனை தீராவிட்டால் அடுத்த கட்டமாக அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சு நடக்கலாம் என்று கூறப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா ஹைதராபாத்திலிருந்து சென்னை திரும்பியதும் இந்த விஷயத்தில் முக்கிய முடிவுஎடுக்கப்படும் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எப்படி இருப்பினும் ஊழியர் சங்கங்கள் கோரும் 20 சதவீத போனஸ் தொகை நிச்சயம் வழங்கப்பட மாட்டாதுஎன்று கூறப்படுகிறது. கூடுதல் போனஸ் கோரும் அனைத்துத் துறைகளும் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருவதாகஅரசு கூறுகிறது.
இந் நிலையில் 20 சதவீத போனஸ் கிடைப்பது சந்தேகம்தான்.
-
ராகுலிடம் போன டாக்குமெண்ட்! நள்ளிரவில் நடந்த மீட்டிங்! இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்!












Click it and Unblock the Notifications