எகிப்தில் தொடர் குண்டுவெடிப்பு: 37 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஜெருசலேம்:
எகிப்து-இஸ்ரேல் எல்லையில் நடந்த 3 தொடர் குண்டுவெடிப்புகளில் 37 பேர் பலியாகியுள்ளனர்.
இஸ்ரேஸ்-பாலஸ்தீன விவகாரத்தில் இதுவரை இந்த இரு நாடுகளுக்குள்ளும், லெபனானிலும் தான் குண்டுவெடிப்புகள், பதில் தாக்குதல்கள் நடந்து வந்தன. இதுவரை அமைதியாக இருந்து வந்த எகிப்து எல்லையிலும்இன்று முதல்முறையாக குண்டு வெடிப்புத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
நேற்றிரவு நடந்த இந்த குண்டு வெடிப்புகளில் 37 பேர் பலியாகியுள்ளனர். 114க்கும் அதிகமானவர்கள்காயமடைந்துள்ளனர். சினாய் பாலைவனத்தில் உள்ள தாபா நகரின் பயணிகள் விடுதிகளின் அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்தது.
எல்லைப் பகுதியான இங்குள்ள விடுதிகளில் ஏராளமான இஸ்ரேலிய பயணிகள் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தபோது குண்டு வெடிப்புகள் நடந்தன.












Click it and Unblock the Notifications