For Quick Alerts
For Daily Alerts
Just In
ஓய்வு முடிவு: ஜெ. இன்று சென்னை திரும்புகிறார்
சென்னை:
ஹைதராபாத்தில் 10 நாட்கள் ஓய்வு முடித்து முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை சென்னை திரும்புகிறார்.
சென்னைக்குக் கிருஷ்ணா நீரைக் கேட்டுப் பெறுவதற்காக கடந்த மாதம் 30-ம் தேதி அவர் தனது தோழிசசிகலாவுடன் ஹைதராபாத் சென்றார். கடந்த 1ம் தேதி ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியைச் சந்தித்துப்பேசினார்.
அதன் பின்னர், ஹைதராபாத்தில் தனக்குச் சொந்தமான திராட்சை தோட்டத்தில் 10 நாட்கள் ஓய்வெடுத்தார். இந்நிலையில் இன்று அவர் சென்னை திரும்புகிறார்.
நாளை மாலை சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் விழாவில் ஐ.நா.வின்ஆலோசனை அமைப்பான சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்புக் குழு வழங்கும் தங்கத் தாரகை விருதை அவர்பெறுகிறார்.
Comments
Story first published: Sunday, October 10, 2004, 5:30 [IST]