அருணாச்சல் பிரதேஷ்: காங்கிரஸ் அமோக வெற்றி
இடாநகர்:
அருணாசலப் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 57 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 55 இடங்களுக்கான முடிவுகள்அறிவிக்கப்பட்டுள்ளன. 32 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதில் 3 இடங்களில் அக் கட்சிபோட்டியே இல்லாமல் வென்றுள்ளது.
இதனால் அந்தக் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது. அம் மாநில காங்கிரஸ் முதல்வர் கெபாங் அபாங்கும்வெற்றி பெற்றுள்ளார்.
பாரதீய ஜனதா கட்சி 7 இடங்களிலும், அருணாச்சல் காங்கிரஸ் 2 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 2இடங்களிலும் சுயேச்சைகள் 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
கருணாநிதி வாழ்த்து:
அருணாச்சல் பிரதேச சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளதையடுத்து அக்கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.