For Daily Alerts
Just In
சென்னை வந்தார் கங்குலி
சென்னை:
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் செளரவ் கங்குலி இன்று காலை சென்னை வந்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது.
இந் நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னையில் வரும் 14ம் தேதி தொடங்குகிறது. இதில்பங்கேற்பதற்காக இரு அணிகளின் வீரர்களும் இன்றிரவு சென்னை வரவுள்ளனர். நாளை முதல் அவர்கள்சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.
இன்று காலை கங்குலி, அணி மேலாளர் துரைராஜ் ஆகியோர் சென்னை வந்தனர். விமான நிலையத்தில்நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க கங்குலி மறுத்து விட்டார். பின்னர் அவர் கிண்டியில் உள்ள நட்சத்திரஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதற்கிடையே சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது.
Comments
Story first published: Monday, October 11, 2004, 5:30 [IST]