இலங்கை: பேச்சுவார்த்தையை தொடர ரணில் வற்புறுத்தல்
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர அதிபர் சந்திரிகா குமாரதுங்காவைஎதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுடன் செய்து கொள்ளப்படும் உடன்பாட்டை அமல்படுத்த அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தவேண்டும். அதற்கு ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவு அரசுக்குத் தேவை.
இந் நிலையில் சந்திரிகாவுக்கு ரணில் எழுதிய கடிதத்தில்,
உடன்பாட்டுக்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு தெரிவிக்குமோ என்று அஞ்சவேண்டாம். தைரியமாக புலிகளுடன் பேச்சைநடத்தலாம்.
மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்கள் தந்து கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட 2002 டிசம்பரில்புலிகள் ஒத்துக் கொண்டனர். இதன் அடிப்படையில் பேச்சுவார்த்தையை தொடங்கலாம்.
இந்த விஷயத்தில் சந்திரிகாவுக்கு தமது கூட்டணி கட்சியான ஜேவிபியிடமிருந்தான் முதல் எதிர்ப்பு வரும். எனவேகூட்டணியில் உள்ள எதிர்ப்புகளைதான் சந்திரிகா முதலில் சமாளிக்க வேண்டும்.
புலிகளுடன் நடக்கும் பேச்சுவார்த்தையை பொது விவாத மேடைக்கு எடுத்துச் சென்றால் பல்வேறு சிக்கல்கள்தோன்றும். எனவே புலிகளுடன் இறுதி ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, அதை பொது விவாத மேடைக்கு எடுத்துச்செல்வதே பொருத்தமாக இருக்கும்.
அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து சந்திரிகாவுடன் பேச எந்த நேரமும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரணில்கூறியுள்ளார்.