இந்திய போர் விமான விபத்து: விமானிகள் தப்பினர்
குவாலியர்:
இந்திய விமானப் படையின் மிராஜ்-2000 ரக போர் பயிற்சி விமானம் இன்று தரையில் விழுந்து நொறுங்கியது.விமானிகள் இருவரும் உயிர் தப்பிவிட்டனர்.
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மகாராஜ்பூர் விமான தளத்தில் இந்திய, சிங்கப்பூர் விமானப் படையினர்இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பயிற்சியில் பங்கேற்கக் கிளம்பிய மிராஜ் விமானத்தின் ஒரு சக்கரம் கழன்று விழுந்தது. அதைத் தொடர்ந்துவிமானத்தை விமான தளத்துக்கே விமானிகள் திருப்பினர். ஆனால், விமான தளத்தை நெருங்கும் முன்பேவிமானம் கட்டுப்பாட்டை இழக்க ஆரம்பித்தது.
இதையடுத்து விமானம் கீழ் நோக்கிப் பாயந்தது. இதை உணர்ந்த விமானியும் துணை விமானியும் பத்திரமாகபாராசூட் மூலம் குதித்து விட்டனர். இதனால் அவர்கள் உயிர் தப்பினார்.
விமான தளத்துக்கு சில கி.மீ. தொலைவிலேயே விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தால்யாரும் காயமடையவில்லை. இந்திய-சிங்கப்பூர் கூட்டு விமானப் படை பயிற்சியும் நிறுத்தப்படவில்லை.
இதுவரை ரஷ்யாவில் வடிவமைக்கப்பட்ட பழைய மிக் ரக விமானங்களே விபத்துக்குள்ளாகி வந்த நிலையில்,இப்போது பிரான்ஸ் தயாரிப்பான நவீன மிராஜ் ரக விமானங்களும் அதிக அளவில் விபத்துக்குள்ளாகஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications