உயிர் பிழைத்த மீனவர் ஜெவுடன் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இலங்கைக் கடற்படை வீரர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு, முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில்சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்த ராமேஸ்வரம் மீனவர்நாகநாதன் இன்று தனது மனைவியுடன் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீதுஇலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் மீனவர் நாகநாதனுக்கு தொண்டையில் குண்டுபாய்ந்தது.

மிகவும் ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை சென்னை அப்பல்லோமருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்குமாறு ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் நாகநாதனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்துநாகநாதன் தற்போது குணமடைந்துள்ளார். இன்று காலை தலைமைச் செயலகத்திற்குத் தனது மனைவியுடன் வந்தநாகநாதன் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அவருக்கு ஆறுதல் கூறிய ஜெயலலிதா தனது தனிப்பட்ட பரிசாக தலா ரூ. 5,000 ரொக்கம் மற்றும் தீபாவளிக்காகபுதிய ஆடைகளையும், இனிப்புகளையும் வழங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+