கணவரை கொன்ற மனைவிக்கு ஆயுள் தண்டனை
திருச்சி:
குடிகாரக் கணவனை கொலை செய்து வீட்டுக்குள் புதைத்த மனைவிக்கு திருச்சி விரைவு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
திருச்சி மாவட்டம் திருவரங்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். பாஸ்கர் தினசரி குடித்து விட்டு மனைவிவசந்தாவைக் கொடுமைப்படுத்துவது வழக்கம்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த வசந்தா, கடந்த 2003ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி தனது பெற்றோர் கைலாசம்,மூக்காயி ஆகியோரின் துணையுடன் கணவனை வெட்டிக் கொன்றார். பின்னர் அவரது உடலை வீட்டுக்குள்புதைத்தார்.
பின்னர் மனசு கேட்காமல் கிராம நிர்வாக அதிகாரி மூலம் நவம்பர் 28ம் தேதி போலீஸில் சரணடைந்தார். இதைத்தொடர்ந்து வசந்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அவரது பெற்றோர்களும்கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த திருச்சி முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதி சோலமலை, வசந்தாவுக்கு ஆயுள்தண்டனையும், ரூ. 150 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். வசந்தாவின் பெற்றோர் விடுதலை செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications