தனியார்துறை இட ஒதுக்கீடு: வீரமணி வலியுறுத்தல்
சென்னை:
வரும் 16ம் தேதி திருவண்ணாமலையில் திராவிடர் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.
இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 126-வது ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் திராவிடர் எழுச்சிமாநாடு வருகிற 16ம் தேதி திருவண்ணாமலையில் நடைபெறுகிறது.
அன்று காலை 10 மணிக்கு இந்துத்துவாவை முறியடிப்போம் என்ற தலைப்பில் கு.வெ.கி. ஆசான் தலைமையில்கருத்தரங்கம் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு கு.இளங்கோவன் தலைமையில் பேரணி நடக்கிறது.
இரவு திருவண்ணாமலை அண்ணா நுழைவாயில் அருகே நடைபெறும் மாநாட்டில் வைகோ, ராமதாஸ், தமிழககாங்கிரஸ் தலைவர் வாசன், திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் நல்லகண்ணு உட்பட பலர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
மாநாட்டில் இந்துத்துவா எதிர்ப்பு, தனியார் துறையில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட தீர்மானங்கள்நிறைவேற்றப்படும்.
தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை சட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுருத்தி அடுத்த மாதம்டெல்லியில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் தலைமையில் பேரணி நடைபெறுகிறது. இதில் திராவிடர் கழகம்உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.
பேரணி இறுதியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோரிடம் மனுக்கள்கொடுக்கப்படும் என்றார்.