பிறந்த ஒரே நாளில் சாக்கடைக்கு வந்த பெண் சிசு!
திருவாரூர்:
பிறந்து ஒரே நாள் ஆன பெண் சிசு, திருவாரூரில் சாக்கடை ஒன்றில் வீசப்பட்டது.
திருவாரூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள சினிமா தியேட்டரின் பின்புறம் சாக்கடை ஒன்று ஓடுகிறது. இந்தசாக்கடையில் ஒரு பெண் சிசு இறந்த நிலையில் மிதப்பதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீஸாருக்குத்தகவல் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து பெண் சிசுவின் உடலை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பிறந்து ஒரு நாளே ஆன நிலையில் அந்தப் பெண் சிசுவை சாக்கடையில் வீசி எறிந்தது யார் என்பது குறித்துதிருவாரூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பெண் குழந்தைகளை வளர்க்க விரும்பாதவர்களிடம் இருந்து சிசுக்களைக் காக்க தொட்டில் குழந்தைத் திட்டம்உள்பட பல எளிய வழிமுறைகளை தமிழக அரசு அமல்படுத்தி வந்தாலும், சாக்கடையிலும் குப்பைத் தொட்டியிலும்குழந்தையை வீசுவதை நம்மவர்கள் இன்னும் நிறுத்தவில்லை.