தமிழக கிராமங்களை கம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ரூ.10.37 கோடி மதிப்பிலான தமிழ்நாட்டிலுள்ள ஊராட்சிகளை கம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டத்தை முதல்வர்ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

முதல் கட்டமாக 1,113 கிராம ஊராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 29 மாவட்ட ஊராட்சி அலுவலகங்கள்மற்றும் ஊரக வளர்ச்சி இயக்ககம் ஆகியவற்றுக்கு கம்ப்யூட்டர் வழங்கப்படும்.

இத் திட்டத்தின் முதல்படியாக ஆண்டிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ், பரங்கிமலை ஊராட்சிஒன்றியம் முடிச்சூர் ஊராட்சி மன்றத் தலைவர் நிர்மலா பாஸ்கர் ஆகியோரிடம் கம்ப்யூட்டர்களை ஜெயலலிதாவழங்கினார்.

ஊராட்சி நிர்வாகம் பயன்படுத்திய நேரம் போக எஞ்சியிருக்கும் நேரத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் இந்தகம்ப்யூட்டரைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இந்தக் கம்ப்யூட்டர்கள்மூலம் 1,113 ஊராட்சிகளிலும் இன்டர்நெட் மையங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மையங்களில் பயன்படுத்திக் கொள்ள வெப் காமிராக்களை ஆண்டிப்பட்டி திம்மரசநாயக்கனூர்முல்லைவனம் சுய உதவிக்குழுத் தலைவி சுமதி, ஆண்டிப்பட்டி குன்னூர் வைகை அறிவொளி சுய உதவிக் குழுத்தலைவி லிங்கம்மாள் ஆகியோரிடம் ஜெயலலிதா வழங்கினார்.

கிராம சுகாதார இயக்கம், மேம்படுத்தப்பட்ட திடக் கழிவு மேலாண்மை, மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களைபயன்படுத்துதல் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் ஊராட்சிகளில் விடியோகான்பரன்ஸிங் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் கிராம நிர்வாகிகள் தங்களது குறைகளை அவர்களதுஇடத்திலிருந்தே மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தெரிவிக்க முடியும்.

இத் திட்டத்தை தேனி மாவட்டம் அரண்மனை புதூர் ஊராட்சி மன்றத் தலைவி முத்துமணியுடன் விடியோகான்ஃபரன்ஸிங் முறையில் ஜெயலலிதா உரையாடி தொடங்கி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+