பிற மொழி சினிமா: கர்நாடக தியேட்டர்கள் மூடல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

தமிழ் உள்பட பிறமொழி திரைப்படங்களை கர்நாடகத்தில் வெளியிட விதிக்கப்பட்டிருக்கும் தடையை விரைவில்முடிவுக்கு கொண்டு வருமாறு கர்நாடக முதல்வர் தரம் சிங்கிடம் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

கன்னடம் அல்லாத பிற மொழிப் புதுப் படங்களை 7 வாரங்கள் கழித்தே திரையிட வேண்டும் என்ற தடையை மீறிசில பெங்களூர் திரையரங்குகளில் புதிய படங்களை உரிமையாளர்கள் திரையிட்டனர். இதைத் தொடர்ந்து அந்ததிரையரங்குகள் மீது கன்னட வெறியர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதற்குக் கண்டனம் தெரிவித்து இன்று கர்நாடகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. பெங்களூரிலும்அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இதற்கிடையே தடையை மீறி பிற மொழிப் படங்களைத் திரையிட்ட திரையரங்க உரிமையாளர்கள் மீதுநடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் தரம்சிங் வீடு முன்பு நடிகர் ராஜ்குமார் தலைமையில் இன்று தர்ணா நடத்தகன்னட திரையுலகினர் முடிவு செய்திருந்தனர்.

இதையடுத்து கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், வினியோகஸ்தர்கள் உள்ளிட்டதிரையுலகைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் தரம்சிங். இந்தப்பேச்சுவார்த்தைக்குப் பின் நடிகர் அசோக் (இயக்குநர் பாலச்சந்தரின் பல தமிழ் படங்களில் நடித்தவர்)செய்தியாளர்களிடம் பேசுகையில்,

முதல்வருடனான பேச்சுவார்த்தையையடுத்து இன்றைய போராட்டம் ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும்திட்டமிட்டபடி பெல்லாரியில் தெலுங்குப் படங்களை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என்றார்.

இந் நிலையில் மும்பை திரையுலகினரும், இந்திய வர்த்தக சபையைச் சேர்ந்தவர்களும் பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்தித்து இப் பிரச்சினை குறித்துப் பேசினர். இதையடுத்து மன்மோகன் சிங், முதல்வர் தரம்சிங்கைதொலைபேசியில் அழைத்து இப்பிரச்சினையில் சுமூக தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்துமாறுஅறிவுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+