ஜெயலலிதாவுக்கு தங்கத் தாரகை விருது: கருணாநிதி புதிய தகவல்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு தங்கத் தாரகை விருது வழங்கிய அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்குழுவில் இடம்பெற்றுள்ள அமைப்பு அல்ல என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஐநா மன்றம் தன்னைக் கெளரவிக்கிறது என்று பவானி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யைசெய்தியாக்கினார்கள். விசாரித்த போது அது ஐநா சபையல்ல, வெத்து வேட்டு என்பது தெரிய வந்தது.
சென்னை சமூக நீதி கோரும் வழக்கறிஞர் மன்றம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு விருதுவழங்கிய அனைத்துலக மனித உரிமைப் பாதுகாப்புக் குழு, ஐநா சபையின் அதிகாரப்பூர்வ அமைப்பு எனக்கூறப்படுவது உண்மையல்ல. ஐநா சபையின் ஆலோசனைக் குழுவில் 2,531 அரசு சாரா அமைப்புகள் அங்கீகாரம்பெற்றுள்ளன.
இதில், ஜெயலலிதாவுக்கு விருது வழங்கிய அமைப்பின் பெயர் இல்லை. விதிமுறைகளை மீறி ஐநா சபையால்அங்கீகரிக்கப்படாத ஒரு சிறிய அமைப்பினை சாக்காக வைத்து ஐநா சபையின் பெயரால் விருது வாங்குவதுபோன்ற பொய்த் தோற்றத்தை தமிழக மக்கள் மத்தியில் ஏற்படுத்த முயற்சித்திருக்கிறார்கள்.
பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டு தமிழக மக்களை தண்டச் சோற்றுத் தடி ராமன்கள் மாதிரி நடத்தியிருக்கிறார்ஜெயலலிதா. இது குறித்த உண்மைச் செய்திகளை பத்திரிக்கைகளும் மூடி மறைத்துவிட்டன. இந்தியாவிலேயே மிகநல்ல பெண்மணி இவர் தான் என்று ஐக்கிய நாட்டு சபை பாராட்டியதாக பத்திரிக்கைகள் செய்தி போட்டன.
இந்த விருதின் பெயரால் முதல்வரும் அமைச்சர்களும் தமிழக மக்களை ஏமாற்றினார்களா? அல்லது ஐநா சபையின்பெயரைச் சொல்லி உக்ரைன் நாட்டு அமைப்பினர் முதல்வரை ஏமாற்றினார்களா? என்ற உண்மையை தெரிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் தற்போது நாடாளுமன்ற பணி நிமித்தமாக அமெரிக்கா சென்றுள்ள திமுகவைச் சேர்ந்த சண்முகசுந்தரமும்அங்கு விசாரித்த வகையில் ஜெயலலிதாவுக்கு விருது தந்த நிறுவனம், ஐ.நா. பட்டியலில் இடம் பெறவே இல்லைஎன்பதும் தெரியவந்தது.
ஜெயலலிதா ஆட்சியில் ஐநா சபையே இந்தப் பாடுபடுகிறது. யார் தான் சற்று துணிச்சலுடன், நடுநிலையுடன்சிந்தித்து மக்களுக்கு நல்லது எது கெட்டது எது என்பதை கூறப் போகிறார்களோ? மக்களும் எப்போது தான் அதைவிளங்கிக் கொள்ளப் போகிறார்களோ? என்று கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications