For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் உயரும் பெட்ரோல், டீசல் விலை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவைத் தேர்தலை மனதில் வைத்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல்இருந்து வந்த மத்திய அரசு விரைவில் அவற்றை உயர்த்த உள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு பேரல்எண்ணெய் 54 டாலர் என்ற உச்சபட்ச விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

ஆனாலும், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் தவிர்த்து வந்தது மத்திய அரசு. காரணம்மகாராஷ்டிர மாநிலத் தேர்தல். இதனால் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு இதுவரை ரூ. 2237 கோடி நஷ்டம்ஏற்பட்டுள்ளது.

நேற்று வாக்குப் பதிவு முடிவடைந்துவிட்ட நிலையில், இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கிறார்பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர். அதிகமான விலை உயர்வை அய்யர் விரும்பவில்லை என்றுகூறப்படுகிறது.

விலையை உயர்த்தி மக்களின் வெறுப்பை சம்பாதிப்பதற்குப் பதிலாக கச்சா எண்ணெய் மீதான இறக்குமதி வரி,கஸ்டம்ஸ் வரிகளை மேலும் குறைக்க வேண்டும் என்று பிரதரிடம் அவர் கோருவார் என்று தெரிகிறது.(ஏற்கனவே இரு மாதங்களுக்கு முன் வரியை நிதியமைச்சகம் குறைத்தது).

சர்வதேச கச்சா எண்ணெயின் விலையின் அடிப்படையில் பார்த்தால் பெட்ரோலின் விலையை உடனடியாகலிட்டருக்கு ரூ. 1.50ம், டீசலின் விலையை லிட்டருக்கு ரூ. 3ம் உயர்த்த வேண்டும் என்கின்றனர்பெட்ரோலியத்துறை அதிகாரிகள்.

ஆனால், இதில் பாதியளவு விலையை மட்டும் உயர்த்தலாம் என அய்யர் கூறி வருகிறார். நிதித்துறை வரிக்குறைப்பு தந்தால் மீதி நஷ்டத்தை சமாளித்துவிடலாம் என பெட்ரோலிய அதிகாரிகளிடம் அவர் கூறி வருகிறார்.

எப்படியோ அடுத்த சில நாட்களில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரப் போகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X