Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலட்சுமி: தமிழக போலீசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

Jayalakshmiஜெயலட்சுமி விவகாரத்தை சிபிஐ விசாரிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை எதிர்த்துதமிழக காவல்துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.

இந்த வழக்கில் தமிழக போலீசார் நடத்திய விசாரணை வெறும் கண்துடைப்பு என்று கூறிய நீதிபதிகள், இந்தவிவகாரத்தை சிபிஐ விசாரிப்பதே சரி என்று தீர்ப்பளித்தனர்.

ஜெயலட்சுமி மீதான வழக்கை முதலில் தமிழக காவல் துறை விசாரித்தது. தமிழக போலீஸார் மீதான வழக்குகளைதமிழக போலீஸாரே விசாரணை செய்தால் நியாயமான நீதி கிடைக்காது. எனவே, இந்த வழக்குகளை சிபிஐவிசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று ஜெயலட்சுமி சார்பில் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டது.

இதையடுத்து சிபிஐ விசாரணைக்கு மதுரை மற்றும் சென்னை உயர் நீதிமன்றக் கிளைகள் உத்தரவிட்டன.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் தென் மண்டல ஐஜி மேல் முறையீட்டு மனு தாக்கல்செய்தார்.

அந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை ஏதும் விதிக்கமறுத்துவிட்டனர். இந்த மனு மீதான விசாரணை 15ம் தேதி (இன்று) நடக்கும் என்று அறிவித்தனர். இதைத்தொடர்ந்து சிபிஐ மிக வேகமாக களத்தில் இறங்கி விசாரணையை ஆரம்பித்துவிட்டது.

இந் நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.பி.சிங், நீதிபதி கிருஷ்ணா ஆகியோர் முன் இன்று தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக காவல்துறையினர் இந்த விஷயத்தில் முறையான விசாரணை நடத்தவே இல்லை. அவர்களதுவிசாரணையே வெறும் கண்துடைப்பு தான். இதனால் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்கிறோம்.ஜெயலட்சுமி விவகாரத்தை சிபிஐ விசாரிப்பதே சரி என்று தீர்ப்பளித்தனர்.

அப்போது இடைமறித்த தமிழக அரசின் வழக்கறிஞர், மாநில அரசின் அனுமதி பெறாமலேயே சிபிஐவிசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றார்.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மாநில அரசின் அனுமதியைப் பெற வேண்டியஅவசியம் உயர் நீதிமன்றத்துக்கு இல்லை என கடுமையாகக் கூறினர்.

இதனால் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணையைத் தடுக்கும் தமிழக அரசின் அனைத்து முயற்சிகளும்தோல்வியடைந்துள்ளன.

கற்புழிப்பு ஸ்பெஷலிஸ்ட் சஸ்பெண்ட்:

இதற்கிடையே ஜெயலட்சுமி வழக்கில் மேலும் ஒரு இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு நெல்லை ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வரன், கமுதி சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் ஆகியோரைதமிழக அரசு தாற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது.

அவர்களுடன் தற்போது நந்தம்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் ஜான் ரோஸ் என்பரும் தாற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் 2002ல் நெல்லையில் பணியாற்றியபோது ஜெயலட்சுமி மீது பொய்யாக விபச்சார வழக்கு பதிவுசெய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் காவல் நிலையத்தில் உள்ள செல்லில் வைத்தே ஜெயலட்சுமியை இவர் கற்பழித்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+