18 பட்டி காவல் தெய்வத்திற்கு சூறை திருவிழா!
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை அருகே மேலூரில் 18 பட்டிகளுக்கு காவல் தெய்வமான காஞ்சிவனக் கோவில் திருவிழாவில் பழங்களை சூறை விட்டுபக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
மேலூர் பகுதியில் காஞ்சிவனக் கோவில் உள்ளது. இது 18 பட்டிகளுக்கும் காவல் தெய்வம் என பக்தர்களால் வழிபடப்படுகிறது.இந்தக் கோவிலில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு திருவிழா எடுக்கப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புரவி ஏற்பு நடந்தது. இதையொட்டி மண்ணால் ஆன குதிரைகளை சுமந்து கொண்டு பக்தர்கள்கோவிலுக்குச் சென்று வழிபட்டனர்.
பின்னர் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பழங்களை சூறை விடும் வைபவம் நடந்தது. இதில் பக்தர்கள் பலவகை பழங்களைசூறை விட்டு நேர்த்திக் கடனை செலுத்தினர்.
திருவிழாவையொட்டி மதுரை, மேலூர் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பலத்த போலீஸ்பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications