திருச்செந்தூர்- கொழும்பு இடையே கடலடி கேபிள்: மாறன்
சென்னை:
திருச்செந்தூர்- கொழும்பு இடையே கடலடி தொலைத் தொடர்பு கேபிள்கள் பதிக்கப்பட்டு வருவதாக மத்திய தொலைத் தொடர்புத்துறைஅமைச்சர் தயாநிதி மாறன் கூறினார்.
இந்தியா-இலங்கை இடையே தொலைத் தொடர்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து சென்னையில் நடந்த கருத்தரங்கில் அவர்கூறியதாவது:
திருச்செந்தூரில் இருந்து கொழும்பு வரை கடலுக்கடியில் பிராட்பேண்ட் கேபிள்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. ரூ. 80 கோடி செலவில் இந்த300 கி.மீ. தூர கேபிள்கள் பதிக்கப்படுகின்றன. அடுத்த ஆண்டில் இந்தப் பணிக் முடிவடைந்துவிடும். இதன் மூலம் இரு நாடுகளுக்கும்இடையிலான தொலைபேசிக் கட்டணம் பெருமளவில் குறையும்.
இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். இந்திய தொலைத் தொடர்புத்துறையில் இப்போது 8.5 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர்.மாதந்தோறும் புதிதாக 20 லட்சம் தொலைபேசி இணைப்புகளை வழங்கி வருகிறோம். 5 ஆண்டுகளில் நாட்டில் தொலைபேசிஇணைப்புகளின் எண்ணிக்கை 20 கோடியாக உயரும் என்றார்.
முன்னதாக இந்தியா-இலங்கை இடையிலான பாரத் சஞ்சார் நிகம் நிறுவனத்தின் சாட்டிலைட் வீடியோ கான்பரன்சிங் வசதியை மாறன்துவக்கி வைத்து அந் நாட்டு தொலைத் தொடர்பு அமைச்சர் ஜெயரத்னேவுடன் பேசினார்.