தோல்வி: மீண்டும் பாஜக தலைவராகிறார் அத்வானி
மும்பை & டெல்லி:
மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்திலும் பா.ஜ.க. தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவராக அத்வானியே மீண்டும் பொறுப்பேற்பார் என்று தெரிகிறது.
இந்தத் தோல்விகளைத் தொடர்ந்து பா.ஜ.கவின் தலைமையை மாற்ற வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத்நெருக்குதல் கொடுத்து வருகிறது. இதையடுத்து பா.ஜ.க. தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வெங்கைய்யாநாயுடு முன் வந்துள்ளார்.
வி.எச்.பியின் தாக்குதல்:
மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து மகாராஷ்டிரத்திலும் தோல்வியைத் தழுவியுள்ளதால் பா.ஜ.கவின்தலைமையை மாற்ற வேண்டும் என அதன் தாய் அமைப்புகளில் ஒன்றான விஸ்வ இந்து பரிஷத் கோரிக்கைவிடுத்துள்ளது.
அதே போல ஆர்.எஸ்.எஸ்சும் பா.ஜ.க. தலைமையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
நாயுடுவின் ராஜினாமா முடிவு:
வி.எச்.பி. உள்ளிட்ட அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்ய பா.ஜ.க. தலைவர்வெங்கைய்யா நாயுடு முன் வந்துள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயையும் முன்னாள் துணைப் பிரதமர்அத்வானியையும் சந்தித்த நாயுடு தனது ராஜினாமா முடிவைத் தெரிவித்தார்.
ஆனால், அதை ஏற்க இரு தலைவர்களும் முதலில் மறுத்தனர். பின்னர் இந்த ராஜினாமா குறித்து கட்சியினருடன்விவாதிக்கலாம் என்று கூறிய அத்வானி, தானே மீண்டும் தலைவராகவும் முன் வந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து கட்சியின் உயர் மட்டக் கூட்டம் டெல்லியில் கூட்டப்பட்டுள்ளது. அதில் நாயுடுவின் ராஜினாமாஏற்கப்படும் என்று தெரிகிறது. இதைத் தொடர்ந்து அத்வானியே தலைவராக பொறுப்பேற்பார்.
வாஜ்பாய், வெங்கையா நாயுடு, பிரமோத் மகாஜன் உள்ளிட்டவர்களை தலைமைப் பொறுப்பில் இருந்துஒதுக்கிவிட்டு மீண்டும் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி போன்ற தலைவர்களை பா.ஜ.க. முன்நிறுத்த வேண்டும் என வி.எச்.பியும் ஆர்.எஸ்.எஸ்சும் பல மாதங்களாகவே கோரி வருகின்றன.
இப்போது மகாராஷ்டிரத்திலும் தோல்வி ஏற்பட்டுள்ளதால் தங்களது கோரிக்கையை அவை தீவிரமாக்கியுள்ளன.
தாக்கரேயின் தாக்குதல்:
இதற்கிடையே முஸ்லீம்களால் தான் மகாராஷ்டிரத்தில் பா.ஜ.க- சிவசேனை கூட்டணியின் தோல்வி அடைந்ததாகசிவசேனை தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.
தனது கட்சியின் பத்திரிக்கையான சாம்னாவி பால் தாக்கரே எழுதியிருப்பதாவது:
முஸ்லீம்களின் ஓட்டு வங்கியாலும் மும்பைக்குள் ஊடுருவி வரும் பிற மாநிலத்தவர்களாலும் தான் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஓட்டு வங்கி அரசியல் நடத்தி வரும் காங்கிரஸ்,நாட்டின் நலனைப் பற்றி கவலைப்படுவதே இல்லை.
அந்தக் கட்சிக்கு கிடைத்துள்ள முஸ்லீம்களின் ஓட்டில் வங்கதேசத்தில் இருந்து நாட்டுக்குள் ஊடுருவியமுஸ்லீம்களின் ஓட்டும் அடங்கும்.
மத்தியில் வலுவில்லாத ஒரு அரசு ஆட்சியில் இருக்கும் சூழலில் நாடு முழுவதுமே இஸ்லாமிய அடிப்படைவாதம்பரவி, நாட்டுக்கே பெரும் கேடு விளையப் போகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் சோனியா காந்தி தனது இருகுழந்தைகளையும் கூட்டிக் கொண்டு இத்தாலிக்கு ஓடிப் போய்விடுவார் என்று கூறியுள்ளார் தாக்கரே.