டிரா ஆனது 2வது டெஸ்ட்; ரசிகர்கள் ஏமாற்றம்
சென்னை:
இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மழை காரணமாகடிரா ஆனது.
இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் கடந்த14ம் தேதி 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்கியது.
முதல் நாளிலிருந்தே விறுவிறுப்பாக நடந்த போட்டி நேற்று கிளைமாக்ஸை எட்டியது. இந்திய அணி 210 ரன்கள்எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இன்று 5வது நாள் ஆட்டம் நடக்கவிருந்தது. ஆனால் நேற்று இரவு முதல்சென்னை நகரில் மழை பெய்யத் தொடங்கியதால் ஆட்டம் நடைபெறுமா என்பதில் சந்தேகம் நிலவியது.
இன்று காலை லேசாக மழை நின்றது. இதனால் ஆட்டம் தொடங்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. ஆனால்மழை தொடர்ந்து பெய்ய ஆரம்பித்ததால் ஆட்டத்தை மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை குறையத்தொடங்கியது.
இன்று பிற்பகல் வரை மழை நிற்காததால், ஆட்டத்தைக் கைவிட நடுவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்துஇப்போட்டி எத்தரப்புக்கும் வெற்றியின்றி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்தியா நிச்சயம் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த நிலையில் மழை வந்து ஆட்டத்தைக்கெடுத்ததால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வீடுகளுக்குத் திரும்பினர்.
இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடக்கவுள்ளது. இந்தப் போட்டியில் சச்சின்டெண்டுல்கர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.