அரசு டாக்டர்கள் வெளிநாடு செல்ல தடை: அமைச்சர்
சென்னை:
அரசு டாக்டர்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கு தமிழக அரசு தடை விதிக்கவுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், அனஸ்தீஷியா போன்ற துறைகளில் போதிய டாக்டர்கள் இல்லாமல் பல அரசுமருத்துவமனைகள் உள்ளன. எனவே இதுபோன்ற சில முக்கியப் பிரிவுகளைச் சேர்ந்த அரசு டாக்டர்கள்வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குவதை நிறுத்தி வைக்க அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது, வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்பும் டாக்டர்களுக்கு 5 ஆண்டுகள் வரை அரசு விடுமுறைஅளிக்கிறது. ஆனால் 5 ஆண்டுகள் முடிந்த பிறகும் சம்பந்தப்பட்டவர்கள் நாடு திரும்புவதில்லை. மாறாகஅங்கேயே செட்டிலாகி விடுகிறார்கள்.
எனவே இந்த நிலையை மாற்ற இனிமேல் அரசு டாக்டர்கள் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது.அவர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது. இதுகுறித்து மூத்த டாக்டர்கள், அதிகாரிகளுடன்அரசு ஏற்கனவே கலந்து பேசியுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் சில துறைகளில் போதிய டாக்டர்கள் இல்லாத காரணத்தால் ஓய்வு பெற்றமருத்துவர்களை அங்கு நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு மாதம் ரூ. 30,000 வரைசம்பளம் கொடுக்கவும் அரசு தயாராக உள்ளது என்றார் தளவாய் சுந்தரம்.