ஜெயலட்சுமி: விசாரணையில் துருவி எடுக்கும் சிபிஐ
மதுரை:
ஜெயலட்சுமி விசாரணை நடத்தும் சிபிஐ அதிகாரிகள், அவர் தரும் தகவல்களை கிராஸ் செக் செய்ய 40 பேர்கொண்ட மாபெரும் சிபிஐ குழுவை களத்தில் இறக்கிவிட்டுள்ளனர்.
ஜெயலட்சுமி கொடுக்கும் விவரங்களை உடனடியாக இந்தக் குழுவிடம் பிரித்துத் தரும் சிபிஐ அதிகாரிகள்,அவரது தகவல்கள் சரிதானா, அவர் எதை மறைக்கிறார், அதன் பின்னணி ஆகியவற்றை விசாரித்துத் தருமாறுகேட்கின்றனர்.
இதனால் மதுரையில் ஜெயலட்சுமியிடம் கூடுதல் டி.எஸ்.பி. சிவாஜி, கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீமதி ஆகியோர் உள்ளிட்ட5 பேர் கொண்ட விசாரணை நடந்தினாலும், இந்தக் குழுவுக்கு உதவியாக மாநிலம் முழுவதுமே 40 பேர் கொண்டசிபிஐ விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது.
இந்த டீம் தரும் தகவல்களை வைத்து ஜெயலட்சுமியை சிவாஜி தலைமையிலான அதிகாரிகள் துருவித் துருவிவிசாரித்து வருகின்றனர். இதனால் பல நேரங்களில் முரண்பாடான தகவல்களைத் தரும் ஜெயலட்சுமி சிபிஐயிடம்மாட்டிக் கொண்டு முழிப்பதாகவும் தெரிகிறது.
தனக்கு வேண்டிய பலரை இன்னும் காட்டிக் கொடுக்காமல் காப்பாற்ற ஜெயலட்சுமி நினைத்தாலும் அந்தவிவரங்களையும் வெளிக் கொண்டு வந்துவிடுவோம் என்கின்றனர் சிபிஐ அதிகாரிகள்.
இன்றும் ஜெயலட்சுமியிடம் சிபிஐ விசாரித்துக் கொண்டிருக்கிறது.
நெல்லையில் சிபிஐ விசாரணை:
இதற்கிடையே ஜெயலட்சுமி மீது விபச்சார வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ஜான் ரோஸ், ஜெயலட்சுமியைஜாமீனில் எடுத்த அதிமுக பிரமுகர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திருநெல்வேலிக்குச்சென்றுள்ளதாகத் தெரிகிறது.
-
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
LPG Gas Cylinder Shortage LIVE: நாளை முதல் இட்லி, தோசை கிடைக்காது.. சென்னை ஹோட்டல்கள் சங்கம் -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.!












Click it and Unblock the Notifications