ஜெயலட்சுமி: விசாரணையில் துருவி எடுக்கும் சிபிஐ
மதுரை:
ஜெயலட்சுமி விசாரணை நடத்தும் சிபிஐ அதிகாரிகள், அவர் தரும் தகவல்களை கிராஸ் செக் செய்ய 40 பேர்கொண்ட மாபெரும் சிபிஐ குழுவை களத்தில் இறக்கிவிட்டுள்ளனர்.
ஜெயலட்சுமி கொடுக்கும் விவரங்களை உடனடியாக இந்தக் குழுவிடம் பிரித்துத் தரும் சிபிஐ அதிகாரிகள்,அவரது தகவல்கள் சரிதானா, அவர் எதை மறைக்கிறார், அதன் பின்னணி ஆகியவற்றை விசாரித்துத் தருமாறுகேட்கின்றனர்.
இதனால் மதுரையில் ஜெயலட்சுமியிடம் கூடுதல் டி.எஸ்.பி. சிவாஜி, கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீமதி ஆகியோர் உள்ளிட்ட5 பேர் கொண்ட விசாரணை நடந்தினாலும், இந்தக் குழுவுக்கு உதவியாக மாநிலம் முழுவதுமே 40 பேர் கொண்டசிபிஐ விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது.
இந்த டீம் தரும் தகவல்களை வைத்து ஜெயலட்சுமியை சிவாஜி தலைமையிலான அதிகாரிகள் துருவித் துருவிவிசாரித்து வருகின்றனர். இதனால் பல நேரங்களில் முரண்பாடான தகவல்களைத் தரும் ஜெயலட்சுமி சிபிஐயிடம்மாட்டிக் கொண்டு முழிப்பதாகவும் தெரிகிறது.
தனக்கு வேண்டிய பலரை இன்னும் காட்டிக் கொடுக்காமல் காப்பாற்ற ஜெயலட்சுமி நினைத்தாலும் அந்தவிவரங்களையும் வெளிக் கொண்டு வந்துவிடுவோம் என்கின்றனர் சிபிஐ அதிகாரிகள்.
இன்றும் ஜெயலட்சுமியிடம் சிபிஐ விசாரித்துக் கொண்டிருக்கிறது.
நெல்லையில் சிபிஐ விசாரணை:
இதற்கிடையே ஜெயலட்சுமி மீது விபச்சார வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ஜான் ரோஸ், ஜெயலட்சுமியைஜாமீனில் எடுத்த அதிமுக பிரமுகர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திருநெல்வேலிக்குச்சென்றுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications