ஈரோடுக்கு விரைவில் மாநகராட்சி அந்தஸ்து: காளிமுத்து

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

ஈரோடு நகருக்கு விரைவில் மாநகராட்சி அந்தஸ்து வழங்கப்படும் என்று தமிழக சட்டசபைத் தலைவர் காளிமுத்துகூறியுள்ளார்.

ஈரோடு வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈரோடு நகருக்கு மாநகராட்சி அந்தஸ்துவழங்குமாறு இங்குள்ள அமைப்புகள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் கோரி வருகின்றன.

இந்தக் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே சென்னை, மதுரை, கோவை,திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்கள் மாநகராட்சியாக உள்ளன. அந்த வரிசையில் விரைவில்ஈரோட்டுக்கும் மாநகராட்சி அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிவிக்க விரும்புகிறேன்.

தமிழக சட்டசபைக் கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு திமுக தலைவர் கருணாநிதிக்கு பலமுறை வேண்டுகோள்வைத்துள்ளேன். இந்த முறை கூடும் குளிர்காலக் கூட்டத் தொடரிலும் அவர் கலந்து கொள்ள வேண்டும் என்றுஉங்கள் மூலம் கோரிக்கை விடுக்கிறேன் என்றார் காளிமுத்து.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+