For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிருஷ்ணா நீர்: தமிழக, ஆந்திர அதிகாரிகள் சந்திப்பு

By Staff
Google Oneindia Tamil News

நகரி:

சென்னைக்கு கிருஷ்ணா நீரை விடுவிப்பது பற்றிய ஆலோசனை கூட்டம் இன்று திருப்பதியில் நடந்தது. இதில்தமிழக தலைமைச் செயலாளர் லட்சுமி பிராணேஷ், ஆந்திர தலைமைச் செயலாளர் மோகன் கன்டா உள்ளிட்டஉயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அண்மையில் கிருஷ்ணா நீரை திறந்து விடும்படி முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரதுவேண்டுகோளை ஏற்று, உடனடியாக சென்னைக்கு 10,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படும் என்று ஆந்திரமுதல்-வர் ராஜசேகர ரெட்டி அறிவித்தார்.

ஆனால் கிருஷ்ணா நீர் இதுவரை திறந்து விடப்படவில்லை. தற்போது கண்டலேறு அணையில் இருக்கும் 1.5டி.எம்.சி. தண்ணீர் திருப்பதி, காளகஸ்தி பகுதிகளின் குடிநீர் தேவையை சமாளிக்கவே சரியாக இருக்கும் என்றுஆந்திர அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந் நிலையில் சென்னைக்கு கிருஷ்ணா நீரை விடுவிப்பது பற்றிய ஆலோசனை கூட்டம் இன்று திருப்பதியில்நடந்தது. இதில் லட்சுமி பிராணேஷ், மோகன் கன்டா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு பேச்சுநடத்தினர். அணைகளின் நீர்மட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X