இந்துஸ்தான் புகைப்பட நிறுவனத்தை மூட கட்சிகள் எதிர்ப்பு
சென்னை:
உதகமண்டலத்தில் உள்ள இந்துஸ்தான் புகைப்படச் சுருள் தயாரிப்பு நிறுவனத்தை மூட மத்திய அரசு முடிவுசெய்துள்ளதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஊட்டியில் உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதால் அதைமூடி விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில், இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனத்தை மூடக் கூடாது. இந்தப் பிரச்சினையில் தலையிட்டு அங்குபணியாற்றும் 12,000 ஊழியர்களின் வாழ்க்கையைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோரியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் நல்லகண்ணு இதுகுறித்து கூறுகையில், இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ்நிறுவனத்தை மூட முயற்சிப்பது தவறான முடிவு. அதற்குப் பதிலாக அந்த நிறுவனத்திற்கு புத்துயிர் ஊட்ட மத்தியஅரசு முன்வர வேண்டும் என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜனும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். மன்மோகன்சிங்குக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், எக்ஸ் ரே தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஒரே பொதுத்துறை நிறுவனம்இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் மட்டுமே. எனவே அந்த நிறுவனத்தை மூடுவதற்குப் பதில் புத்துயிர்ஊட்ட அரசு முன்வர வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதற்கிடையே, இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவன ஊழியர்கள், தொழிற்சாலை முன் காலவரையற்றஉண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications