வீரப்பன் மரணத்தில் ஜோதிடம் பலித்தது?
மேட்டூர்:
வீரப்பன் தனது 53 வயதுக்கு முன்பே மரணமடைவான் என்று அவனது ஜாதகத்தில் கணித்துக் கூறப்பட்டிருந்ததுஇப்போது பலித்து விட்டது.
1952ம் வருடம் ஜனவரி 18ம் தேதி உத்திராட நட்சத்திரம் கன்னி ராசியில் பிறந்தவன். அவனது சொந்த வீடும்,தோட்டமும் இப்போது பாழடைந்து காணப்படுகிறது. அவனால் கட்டப்பட்ட கோவில் இன்று ஒரு வேளை பூஜைகூட நடைபெறாமல் பாழடைந்து காணப்படுகிறது.
வீரப்பனின் ஜோதிடத்தை கணித்த ஜோதிடர் ஒருவர், வீரப்பன் தனது 53வது பிறந்த நாளை காணும் முன்பே இறந்துவிடுவான் என்று கூறியிருந்தார். அவரது கூற்று அப்படியே பலித்திருப்பது குறித்து வீரப்பனின் உறவினர்கள்ஆச்சர்யப்படுகின்றனர்.
மீசை போனால்...
அதேபோல் வீரப்பன் தனது மீசை விஷயத்திலும் அதிக செண்டிமென்ட் கொண்டிருந்தான். பெரிய மீசைவைத்திருக்கும் வரைதான் பிறரை அடக்க ஆள முடியும் என்று நினைத்தவன்.
மீசையை மழித்தால் தனது உயிருக்கே ஆபத்து நேரும் என முன்பு ஒரு பேட்டியில் கூறியிருக்கிறான்.அப்படிப்பட்டவன் மீசை எதற்கு டிரிம் செய்தான் என்று தெரியவில்லை. அவன் நினைத்ததுபோலவே மீசையைக்குறைத்ததும் ஆயுசு முடிந்துவிட்டது.