For Daily Alerts
Just In
அதிரடிப்படைக்கு மத்திய அரசு பாராட்டு
டெல்லி:
சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மத்திய அரசு தனது பாராட்டுகளை தமிழக, கர்நாடக,மத்திய படைகளுக்கு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கூறுகையில், இந்த அதிரடி நடவடிக்கையைப்பாராட்டுகிறோம். இதன் மூலம் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு அடையாளமாகத் திகழ்ந்த ஒருவர்அழிக்கப்பட்டுவிட்டார்.
தமிழக, கர்நாடக, மத்தியப் படைகளின் இந்த சாதனையைப் பாராட்டுகிறோம். வீரப்பனின் எஞ்சியகூட்டாளிகளைக் கொல்ல நடவடிக்கை எடுக்காமல், கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இது சம்பந்தமான நடவடிக்கைகள் முன்னதாகவே தொடங்கிவிட்டன. இதற்கு மத்திய அரசு எல்லாவிதமானஉதவிகளையும் செய்யும் என்றார்.
Comments
chennai tamil nadu jayalalitha father central government daughter news veerappan stf rajkumar vijayakumar valter devaram suba ilavarasan
Story first published: Wednesday, October 20, 2004, 5:30 [IST]