For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகாராஷ்டிரா: முதல்வர் பதவி தேர்வில் இழுபறி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை அடைவதில் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் கட்சிக்கும் தேசியவாத காங்கிரஸ்கட்சிக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் 69 எம்.எல்.ஏக்களும் தேசியவாத காங்கிரஸ் சார்பில் 71 எம்.எல்.ஏக்களும்வெற்றி பெற்றனர். அதிக இடம் பெற்றுள்ள தங்களுக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ்தலைவர் சரத்பவார் கோரி வருகிறார்.

ஆனால் காங்கிரஸ் இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. இந் நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும்,சரத் பவாரும் இன்று சந்தித்து பேசுகிறார்கள் என்றும் அதன் பிறகு யாருக்கு முதல்வர் பதவி என்பதுஅறிவிக்கப்படும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் மார்க்ரெட் ஆல்வா கூறியிருந்தார்.

ஆனால் தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியும், மத்திய அமைச்சருமான பிரபுல் பட்டீல்நிருபர்களிடம் கூறுகையில், இன்று ஞாயிறு விடுமுறை என்பதால், சோனியாவும், பவாரும் சந்தித்துப் பேசவாய்ப்பில்லை என்றார்.

இதனால் கடந்த 8 நாட்களாக நிலவி வரும் சிக்கல் மேலும் நீடிக்கும் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X