மருது பாண்டியர்கள் தபால் தலை இன்று வெளியீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மருது பாண்டியர் சகோதரர்களின் நினைவைப் போற்றும் வகையில் 5 ரூபாய் தபால்தலை இன்றுவெளியிடப்படுகிறது.
சென்னை அண்ணாசாலை தலைமைத் தபால் நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் மத்தியதொலைத்தொடர்பு மற்றும் தகவல் நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் இத் தபால் தலையை வெளியிடுகிறார்.
இன்றைய தினமே மதுரையிலும் இத் தபால் தலை வெளியிடப்படுகிறது. இந்த விழாக்களுக்கு மாமன்னர்மருதுபாண்டியர் பண்பாட்டு நல சங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் தபால்தலை, முதல் நாள் உறை விற்கப்படும். தபால் தலை சேகரிப்புஅலுவலகங்களில் நாளை முதல் விற்பனைக்குக் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications