பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்ற ரஜினிகாந்த்
சென்னை:
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட தலைவரான பங்காரு அடிகளாரிடம் நடிகர் ரஜினிகாந்த் ஆசி பெற்றார்.
சிவாஜி பிலிம்ஸ் தயாக்கும் சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இதற்கான பூஜை சனிக்கிழமை சிவாஜி கணேசன் வீட்டில்நடந்தது. இந் நிலையில் திடீரென மேல்மருவத்தூர் சென்ற ரஜினி அங்கு பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றார்.
ரஜினியுடன், சிவாஜி பிலிம்ஸ் ராம்குமார், இயக்குனர் பி.வாசு ஆகியோரும் சென்றனர். பங்காரு அடிகளாரின் வீட்டுக்கு சென்ற ரஜினியைஅடிகளாரின் மகன் அன்பழகன் வரவேற்றார்.
பின்னர் பங்காரு அடிகளாருக்கு பொன்னாடை போர்த்திய ரஜினி, சுமார் ஒரு மணி நேரம் அங்கிருந்தார்.
இதையடுத்து ஆதிபராசக்தி ஆலயத்திற்கு சென்ற ரஜினி சிறப்புப் பூஜைகள் செய்தார். பின்னர் பங்காரு அடிகளார் நடத்தி வரும் கல்விநிலையங்களை சுற்றிப் பார்த்தார்.
ஆதிபராசக்தி விவசாயப் பண்ணைக்கும் சென்ற ரஜினி அங்கு சிறிது தியானத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து மீண்டும் அடிகளாரைசந்தித்து விடை பெற்றார் ரஜினி.